கிரிக்கெட்
null

ரெட் பால் பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா: மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புகிறாரா?

Published On 2024-09-13 01:56 GMT   |   Update On 2024-09-13 01:58 GMT
  • 2018-ம் ஆண்டிற்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.
  • தற்போது ரெட் பாலில் பயிற்சி பெற்று வருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பையை வென்றது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. அவர் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமி்க்கப்பட்டுள்ளார்.

ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்த நிலையில் அவர் ரெட் பந்தில் இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அப்படி திரும்பினாலும் அதிர்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் தொடரில் கூட விளையாடலாம்.

டெஸ்ட் அணிக்கு அவர் தயாரானால் ரோகித் சர்மா மற்றும் கம்பீருக்கு அதைவிட சிறந்தது ஏதும் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இன்னும் விளையாடாமல் உள்ளார். அவர் துலீக் டிராபியிலும் இடம் பெறவில்லை.

30 வயதாகும் ஹர்திக் பாண்ட்யா 2016-ம் ஆண்டு ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2017-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கிய டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதங்களுடன் 532 ரன்கள் அடித்துள்ளார். 17 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

Tags:    

Similar News