கிரிக்கெட் (Cricket)

2025 ஐபிஎல் தொடரில் கம்மின்ஸ், கிளாசனை தக்கவைக்க ஐதராபாத் அணி முடிவு

Published On 2024-10-16 16:05 GMT   |   Update On 2024-10-16 16:05 GMT
  • 23 கோடி ரூபாய் கொடுத்து ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு
  • அக்டோபர் 31ம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட வேண்டும்

ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம்.

இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கேடு விதித்துள்ளது.

வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 23 கோடி ரூபாய் கொடுத்து தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளாசனுக்கு அடுத்தபடியாக கேப்டன் பேட் கம்மின்சுக்கும் 18 கோடி ரூபாய் கொடுத்தும் அபிஷேக் சர்மாவுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைக்கவும் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளது.

மேலும், டிராவிஸ் ஹெட், நிதிஷ்குமார் ரெட்டியையும் தக்க வைக்க ஐதராபாத் அணி திட்டமிட்டு வருவதாகவும் RTM கார்டை பயன்படுத்தி இருவரையும் தக்க வைக்கலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

Tags:    

Similar News