கிரிக்கெட் (Cricket)

முதல் அசாம் வீரர்: இந்திய ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரியான் பராக்

Published On 2024-08-07 10:17 GMT   |   Update On 2024-08-07 10:17 GMT
  • இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
  • இந்த போட்டியில் ரியான் பராக் அறிமுகமானார்.

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ரியான் பராக், ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.

இந்த போட்டியில் அறிமுக வீரராக ரியான் பராக் களமிறங்குகிறார். இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 256 வீரர் ஆவார். அவருக்கி நட்சத்திர வீரர் விராட் கோலி தொப்பி வழங்கினார்.

இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வான முதல் அசாம் மாநில வீரர் ரியான் பராக் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News