கிரிக்கெட் (Cricket)

முக்கியமான மீட்டிங்... டோனி அனுப்பிய மெசேஜ்- நம்பிக்கையில் சி.எஸ்.கே.

Published On 2024-10-24 01:53 GMT   |   Update On 2024-10-24 01:53 GMT
  • 28-ந்தேதி வரை சந்திக்க முடியாது என சி.எஸ்.கே. நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.
  • 31-ந்தேதிக்கு முன் உறுதிப்படுத்துவார் என நம்புகிறோம்- சி.எஸ்.கே. நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழந்த எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறார். சி.எஸ்.கே. அணியின் பிராண்ட் ஆக எம்.எஸ்.டோனி மாறிவிட்டார் எனச் சொல்லலாம். அவரை காண்பதற்காகவே ரசிகர்கள் மைதானத்தில் குவிகிறார்கள்.

கடந்த ஐ.பி.எல். தொடர்தான் எம்.எஸ். டோனியின் கடைசி தொடராக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் எம்.எஸ். டோனி மீண்டும் விளையாடுவார் என சி.எஸ்.கே. நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் எம்.எஸ். டோனி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

2025 ஐ.பி.எல். தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து அணிகளும் குறிப்பிட்ட வீரர்களை தக்கவைத்துவிட்டு மற்ற வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும்.

இதனால் சி.எஸ்.கே. டோனியை ரிலீஸ் செய்துவிட்டு, uncapped வீரர் என்ற வகையில் 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்து கொள்ள முடிவு செய்கிறது.

இது தொடர்பாக டோனியிடம் பேச சி.எஸ்.கே. நிர்வாகம் விரும்பியது தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களை பட்டியலை வருகிற 31-ந்தேதிக்குள் ஒவ்வொரு அணியும், ஐபிஎல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இதனால் டோனி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் நடத்த சி.எஸ்.கே. நிர்வாகம் விரும்பியது.

ஆனால் தன்னால் 28-ந்தேதி வரை ஆலோசனை கூட்டத்தில் கலந்த கொள்ள முடியாது என எம்.எஸ். டோனி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் டோனியின் முடிவை தெரிந்து கொள்ள சி.எஸ்.கே. நிர்வாகம் காலக்கெடுவான 31-ந்தேதிக்கு முன் 29 அல்லது 30-ந்தேதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பாக சி.எஸ்.கே. அணியின் சிஇஓ விஸ்வநாதன் கூறுகையில் "எம்.எஸ். டோனியிடம் இருந்து நாங்கள் எந்த தகவலையும் பெறவில்லை. இருந்தாலும் கூட சி.எஸ்.கே. அணிக்காக அவர் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். 31-ந்தேதிக்கு முன்பாக அவர் உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை ஏலத்திற்கு முன்னதாக தக்கவைத்துக் கொள்ள முடியும். எம்.எஸ். டோனி உறுதிப்படுத்தினால் 120 கோடி ரூபாயில் சி.எஸ்.கே. 4 கோடி ரூபாய் செலவழித்து டோனியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இந்திய அணியில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்றபின், ஐ.பி.எல். தொடரை தவிர மற்ற எந்த தொடர்களிலும் எம்.எஸ். டோனி விளையாடவில்லை. கடந்த முறை பினிஷராக களம் இறங்கி 161 ரன்கள் அடித்தார். ஆனால் ஸ்டிரைக் 220 ஆகும். கடைசி நேரத்தில் சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

Tags:    

Similar News