கிரிக்கெட் (Cricket)

எங்களுக்கு அதே பிட்ச் தான் வேண்டும்: அடம் பிடிக்கும் பாகிஸ்தான்

Published On 2024-10-13 17:10 GMT   |   Update On 2024-10-13 17:10 GMT
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
  • தொடர் தோல்வி எதிரொலியால் பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

லாகூர்:

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட்டானது. இதையடுத்து,

பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் அக்டோபர் 15 - 19 வரை நடைபெறவுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 - 28 வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய முல்தான் மைதானத்தின் அதே பிட்சில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News