கிரிக்கெட் (Cricket)

என்னவொரு மடத்தனம்.. பாபர் அசாமை கழற்றி விட்ட பாகிஸ்தான் மீது மைக்கேல் வாகன் செம கோபம்

Published On 2024-10-15 06:16 GMT   |   Update On 2024-10-15 06:16 GMT
  • பாபர் அசாம் ஓய்வு என்று பெயரில் வலுக்கட்டாயமாகக் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்றாக நான் பார்க்கிறேன்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் இன்னும் மிச்சமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் கேட்பன் பாபர் அசாம் அப்போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள்ளார். கடந்த சில மாதங்களாகவே சுமாராக செயல்பட்டுவருவதாக விமர்சனத்துக்குள்ளான பாபர் அசாம் ஓய்வு என்று பெயரில் வலுக்கட்டாயமாகக் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதற்குப் பாகிஸ்தான் வீரர் ஃபகர் சமான் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது ஆச்சர்யங்கள் நிறைந்த ஒன்றாக நான் பார்க்கிறேன்.

 

ஆனால் இந்த முடிவு அந்த எல்லாவற்றையும் விட அதிக ஆச்சர்யம் தருவதாக உள்ளது. இது ஒரு முட்டாள்தனமான முடிவு. அவராகவே [பாபர் அசாம்] விருப்பப்பட்டு ஓய்வு கேட்காமல் இது நடந்திருக்கும் பட்சத்தில் நிச்சயம் இது முட்டாள்தனமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News