கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை: இந்திய பெண்கள் அணி இன்று நியூசிலாந்துடன் பலப்பரீட்சை

Published On 2024-10-04 08:52 GMT   |   Update On 2024-10-04 08:52 GMT
  • இந்தியா இடம் பிடித்துள்ள "ஏ" பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உள்ளன.
  • இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ள பேட்டர்கள் உள்ளனர்.

சார்ஜா மற்றும் துபாயில் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் உள்ளன.

நேற்று "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைகளுடன் பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. பந்து வீச்சிலும் தீப்தி சர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.

இதனால் முழு பலத்தையும் வெளிப்படுத்தி நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூட விரும்பும். அதேவேளையில் நியூசிலாந்து அணியும் பலம் வாய்ந்தது. இந்திய அணியை வீழ்த்த முனைப்பு காட்டும். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

"பி" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வங்கதேசம் வீழ்த்தியிருந்தது.

Tags:    

Similar News