கிரிக்கெட் (Cricket)
null

மகளிர் டி20 உலகக் கோப்பை- இந்திய அணிக்கு 106 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published On 2024-10-06 11:59 GMT   |   Update On 2024-10-06 13:23 GMT
  • டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.
  • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துபாய்:

9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது.

தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிடா தார் 28 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும் ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணி முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Tags:    

Similar News