விளையாட்டு

குத்துச்சண்டை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றார் நிஷாந்த் தேவ்

Published On 2024-05-31 10:56 GMT   |   Update On 2024-05-31 10:56 GMT
  • நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தினார்.
  • ஏற்கனவே மூன்று இந்திய வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக தகுதி பெறுவதற்கான தகுதிச் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற தகுதிச் சுற்று ஒன்றில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை நிஷாந்த் தேவ் இழந்தார். இந்த நிலையில் இன்று மற்றொரு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் நிஷாந்த் தேவ் 71 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மால்டோவா வீரரை 5-0 என வீழ்த்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இடம் பிடித்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.

இந்தியாவைச் சேர்ந்த பெண் வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), ப்ரீத் பவார் (54 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (75) ஆகியோர் ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்னர்.

அருந்ததி சவுத்ரி (66 கிலோ), அமித் பங்கல் (51) ஆகியோர் தகுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News