விளையாட்டு (Sports)

தைவான் ஜோடியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சாத்விக்- சிராக் ஜோடி

Published On 2024-05-18 12:20 GMT   |   Update On 2024-05-18 12:20 GMT
  • சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
  • காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என வீழ்த்தியிருந்தது.

தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் தைவான் ஜோடியை எதிர்கொண்டது. தங்களைவிட குறைவான தரவரிசையில் உள்ள தைவான் ஜோடியை மிகவும் எளிதாக வீழ்த்தியது.

இந்திய ஜோடியின் ஆட்டத்தை தைவான் ஜோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News