கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சர்பராஸ் கானை கடிந்துகொண்ட ரோகித் சர்மா

Published On 2024-10-17 18:41 GMT   |   Update On 2024-10-17 18:41 GMT
  • முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் கைப்பற்றினார்.

பெங்களூரு:

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்னும், டேரில் மிட்செல் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்து அணி விளையாடியபோது பீல்டிங் செய்த சக வீரர் சர்பராஸ் கான் பொசிஷனில் இல்லாததைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா சத்தம் போட்டுக் கத்தினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

Similar News