விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக்: இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2024-07-30 13:31 GMT   |   Update On 2024-07-30 13:31 GMT
  • இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
  • ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் கோல் மழையால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா.

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.

இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்-முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 21-13 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Tags:    

Similar News