செய்திகள் (Tamil News)
திருப்பூர் அருகே டேங்கர் லாரி- கார் மோதல்: 2 பேர் பலி
திருப்பூர் அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
திருப்பூர்:
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40).
இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை கரூரில் நடந்தது. இதற்காக சண்முகம் நேற்று தனது காரில் கரூரூக்கு சென்றார். காரை டிரைவர் ஆனந்த் (40) என்பவர் ஓட்டினார்.
பின்னர் நள்ளிரவில் காரில் கோவைக்கு இருவரும் திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் கார், திருப்பூரை அடுத்த அவினாசி பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து ஒரு டேங்கர் லாரி ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது.
இதில் திடீரென டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சண்முகம், ஆனந்த் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவினாசிபாளையம் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40).
இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை கரூரில் நடந்தது. இதற்காக சண்முகம் நேற்று தனது காரில் கரூரூக்கு சென்றார். காரை டிரைவர் ஆனந்த் (40) என்பவர் ஓட்டினார்.
பின்னர் நள்ளிரவில் காரில் கோவைக்கு இருவரும் திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் கார், திருப்பூரை அடுத்த அவினாசி பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து ஒரு டேங்கர் லாரி ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது.
இதில் திடீரென டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சண்முகம், ஆனந்த் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவினாசிபாளையம் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.