செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1306 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2018-05-17 09:37 GMT   |   Update On 2018-05-17 09:37 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூர்:

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 2700 கன அடியாக உள்ளது.

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் 33.85 அடியிலிருந்து 33.63 அடியாக குறைந்து உள்ளது.

Tags:    

Similar News