செய்திகள் (Tamil News)
துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி:
இதனால் அவர்களது படகுகள் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்பனை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு போகவில்லை.
இதனால் அவர்களது படகுகள் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.