செய்திகள்

திருமங்கலத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: நகை பட்டறை தொழிலாளி கைது

Published On 2018-06-01 10:08 GMT   |   Update On 2018-06-01 10:08 GMT
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நகை பட்டறை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்:

திருமங்கலம் துப்புரவு தொழிலாளர் காலனியை சேர்ந்த 8 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்து வந்தாள். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது 5 வயது தங்கையுடன் காந்திஜி தெருவில் உள்ள ஆசிரியையை பார்க்க சென்றாள்.

அப்போது அங்கு ஆசிரியை இல்லை. கீழ் வீட்டில் இருந்த அய்யப்பன் மகன் பாலவிக்னேஷ் (வயது 24) என்பவர் 2 சிறுமிகளிடமும் மிட்டாய் தருவதாக கூறி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு 2 நிறுமி களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பாலவிக்னேசை கைது செய்தனர். இவர் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

Tags:    

Similar News