செய்திகள்
காட்பாடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசிய காட்சி.

பாராளுமன்றம், சட்டசபைக்கு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வருவது உறுதி - துரைமுருகன்

Published On 2018-06-28 04:11 GMT   |   Update On 2018-06-28 04:11 GMT
வரும் டிசம்பர் மாதத்துக்குள் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி என தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார். #DuraiMurugan #DMK
வேலூர்:

காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.



வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி. அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரும்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் வேலையாக காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும் அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். சிலர் என்னை பற்றி அவதூறாக பேசி குறை கூறி வருகின்றனர். அவர்கள் எல்லாம் சாயம் போகக்கூடியவர்கள் அவர்கள் பெயரை நாங்கள் சொல்லக்கூட அவர்களுக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அ.தி.மு.க வினர் துரைமுருகன் குறித்து குறை கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 1971 முதல் இதுவரை காட்பாடி தொகுதியில் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினார்.  #DuraiMurugan #DMK



Tags:    

Similar News