செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது - வினாடிக்கு 46422 கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2018-07-26 04:22 GMT   |   Update On 2018-07-26 04:22 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. #MetturDam #MeturWaterLevel
சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, கடந்த 23-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



இந்த நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே, அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து 80,291 கன அடியில் இருந்து 48,065 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 93.93 டி.எம்.சி.யாக உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 46,422 கன அடியாக உள்ளது.  எனினும், அணையின் நீர்மட்டம் 120.22 அடியில் இருந்து 120.29 அடியாக உயர்ந்துள்ளது. #MetturDam #MeturWaterLevel
Tags:    

Similar News