செய்திகள்
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 66 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை 8 மணி நிலவரப்படி 66 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
ஒகேனக்கல்:
கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று 50 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தது. இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சற்று சரிந்து 66 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 19-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal
கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பால் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நேற்று 50 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தது. இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சற்று சரிந்து 66 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 19-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal