செய்திகள் (Tamil News)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: புதுவை முதல்வர் நாராயணசாமி இரங்கல்

Published On 2018-08-17 05:48 GMT   |   Update On 2018-08-17 05:48 GMT
டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Narayanasamy

புதுச்சேரி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் புதுவையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவித்துள்ளார். அதே போல் புதுவை அரசு சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


 

இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்க இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News