செய்திகள்
திருச்சி, புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் அனுமதி
திருச்சி மற்றும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் 4 பெண்கள் உள்பட 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #swineflu
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.
தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரை கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழப்பெருங்காவூர் மளவனூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி நீலமேகத்தின் மனைவி சாரதா (40) மற்றும் ஒரு பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் சாதாரண காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #swineflu
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி நூர்ஜகான் (வயது 48). இவருக்கு கடந்த 13-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் சரியாகவில்லை.
தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் நூர்ஜகானுக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்தது. அதில் நூர்ஜகானுக்கு பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி நகராட்சி அதிகாரிகள், நூர்ஜகான் வீட்டிற்கு சென்று, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி அறிவுரை கூறினர். இதையடுத்து அவர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே நூர்ஜகானின் மகள் பாத்திமாவிற்கும் காய்ச்சல் ஏற்பட்டது. சோதனையில் அவருக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழப்பெருங்காவூர் மளவனூர் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி நீலமேகத்தின் மனைவி சாரதா (40) மற்றும் ஒரு பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் சாதாரண காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #swineflu