தமிழ்நாடு (Tamil Nadu)
மக்கள் நீதி மய்யம்

சென்னையில் நாளை மக்கள் நீதி மய்யத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா

Published On 2022-02-20 04:52 GMT   |   Update On 2022-02-20 04:52 GMT
மக்கள் நீதி மய்யத்தின் 5-ம் ஆண்டு தொடக்கவிழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மவுரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் 5-ம் ஆண்டு தொடக்கவிழா நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (21-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில், நம் தலைவர் கமல்ஹாசன் நமது கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து கட்சியினருடன் உரையாற்ற உள்ளார். அதே நேரத்தில், மாவட்டங்களில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் நமது கட்சியின் கொடியினை ஏற்றி கோலாகலமாக விழாவினை கொண்டாடி சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொடியேற்ற நிகழ்விற்கு பிறகு மாவட்டங்களில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்வுகளை தலைவர் காணும் வகையிலும், பொறுப்பாளர்கள் மற்றும் மய்ய உறவுகளுடன் தலைவர் உரையாட ஏதுவாக இணையவழி உரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள், மய்ய உறவுகளுடன் தலைவர் உரையாடுவதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இணையச்சுட்டி பின்னர் தெரிவிக்கப்படும்.

நிகழ்வுகளை கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றியும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றியும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News