தமிழ்நாடு (Tamil Nadu)
விபத்தில் பலியான கோபி-சுகந்தி மல்லிகா.

காங்கயம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி பலி

Published On 2022-03-02 03:48 GMT   |   Update On 2022-03-02 03:48 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த கணவன், மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் காந்திநகரை சேர்ந்தவர் கோபி (வயது 34). இவரது மனைவி சுகந்தி மல்லிகா(25). இவர்களது மகன் சரண் (6). கோபியும், சுகந்தி மல்லிகாவும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தனர்.

நேற்று சிவராத்திரியையொட்டி கணவன் -மனைவி இருவரும் தங்களது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்றனர். காங்கயம்-தாராபுரம் சாலையில் புதுப்பாளையம் பிரிவில் செல்லும் போது அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை கோபி சாலையில் திருப்பினார். அப்போது பின்னால் காங்கயம் ஊதியூர் கருக்கம்பாளையத்தை சேர்ந்த நிலபுரோக்கர் ஜெகநாதன் (35) மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் 4பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த 4பேரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபி இறந்தார். மேல் சிகிச்சைக்காக சுகந்தி மல்லிகா கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தி மல்லிகா இறந்தார். பலத்த காயமடைந்த ஜெக நாதன், சரண் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News