தமிழ்நாடு (Tamil Nadu)

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 25-ந்தேதி விடுமுறை

Published On 2022-10-20 07:01 GMT   |   Update On 2022-10-20 07:01 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.
  • கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட், பழம் மார்க்கெட் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் செயல்படும்.

சென்னை:

சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் மிகவும் பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாகும். சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி சென்று சில்லரை விலையில் விற்பனை செய்வது வழக்கம்.

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளதாக அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர இருப்பதால் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பூ மார்க்கெட், பழம் மார்க்கெட் ஆகியவை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் மார்க்கெட்டுக்கு வந்து பூ, பழம் வாங்கலாம் என்றும் பூ மார்க்கெட் மற்றும் பழம் மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News