தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 34% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை

Published On 2024-09-16 16:20 GMT   |   Update On 2024-09-16 16:20 GMT
  • நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
  • தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டிலும் இம்முறை அதிகமான மழை பொழிந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.

இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையால் குறைவான மழைபொழிவை பெறும் மாநிலமான தமிழ்நாட்டிலும் இம்முறை அதிகமான மழை பொழிந்துள்ளது.

அதன்படி ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 16) வரை தமிழ்நாடு மற்றும் புதுவையில் 359.6 மி.மீ மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழை அளவு 269.3 மி.மீ ஆகும். ஆகவே தற்போது வரை தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 34% அதிகமாக பெய்துள்ளது.

Tags:    

Similar News