தமிழ்நாடு

பழனியில் 40 டன் எடையில் தயாராகும் பிரமாண்ட கருப்பணசாமி சிலை

Published On 2024-07-25 02:17 GMT   |   Update On 2024-07-25 02:17 GMT
  • சிலை வடிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  • கையில், ராட்சத அரிவாளுடன் கருப்பணசாமி நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கப்படுகிறது.

பழனி:

பழனி கிரிவீதி பகுதியில், தனியார் சிற்பக்கூடம் உள்ளது. இங்கு பல்வேறு சாமி சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிற்பக் கூடத்தில் 24 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண சாமி சிலை செய்யப்பட்டு வருகிறது. சிலை வடிக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மதுரையில் உள்ள ஒரு கோவிலுக்கு கருப்பணசாமி சிலை கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கரூரில் இருந்து சுமார் 70 டன் எடையில் ராட்சத கருங்கல் கொண்டு வரப்பட்டு 8 மாதங்களாக சிலை செய்யும் பணி நடக்கிறது. சுமார் 30 டன் கற்கள் பெயர்த்தது போக, மீதமுள்ள 40 டன் எடையில் பிரமாண்டமாக சிலை உருவாகிறது. கையில், ராட்சத அரிவாளுடன் கருப்பணசாமி நிற்கும் கோலத்தில் சிலை வடிக்கப்படுகிறது.

ஆடிப்பெருக்கு அன்று கோவில் நிர்வாகத்திடம் சிலை ஒப்படைக்கப்பட உள்ளது என்றனர்.

Tags:    

Similar News