தமிழ்நாடு (Tamil Nadu)
- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- திருவள்ளூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போல் திருவள்ளூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-22
பள்ளிப்பட்டு-10
ஆர்.கே.பேட்டை-7
சோழவரம்-35.40
செங்குன்றம்-29
பொன்னேரி-14
ஜமீன்கொரட்டூர்-6.60
பூந்தமல்லி-15.30
திருவாலங்காடு-22
திருத்தணி-5
பூண்டி-17
திருவள்ளூர்-32
ஊத்துக்கோட்டை-9
ஆவடி-25.