தமிழ்நாடு

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் அதிமுக போராட்டம்

Published On 2024-07-22 06:14 GMT   |   Update On 2024-07-22 06:14 GMT
  • ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருச்சி:

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளுக்குட்பட்ட சில ஊராட்சிகளையும் லால்குடி, திருவெறும்பூர் தொகுதிகளுக்குட்ட சில ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியில் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Tags:    

Similar News