தமிழ்நாடு

பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை: சாலை மறியல்.. போலீஸ் குவிப்பு!

Published On 2024-07-28 07:59 GMT   |   Update On 2024-07-28 07:59 GMT
  • கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
  • பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கையை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். நடுவழியில் திடீரென வழிமறித்த மர்ம கும்பல் செல்வக்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செல்வக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி சாய் சவுந்தர்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசியல் பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டது, உறவினர்கள் போராட்டம் என தொடர்ந்து அந்த பகுதியில் பதற்ற சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சமீப காலங்களில் அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Tags:    

Similar News