தமிழ்நாடு

சென்னை புளியந்தோப்பில் பரபரப்பு- லிஃப்ட் அறுந்து விழுந்து ஒருவர் பலி

Published On 2024-06-29 14:14 GMT   |   Update On 2024-06-29 14:14 GMT
  • 10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து.
  • விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கணேசன் (55) என்பவர் உயிரிழந்துள்ளார்.

முறையான பராமரிப்பு இல்லாததால், லிஃப்ட் அறுந்து விழுந்ததாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News