தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் - ஆவடி மின்சார ரெயில் ரத்து

Published On 2024-08-02 03:33 GMT   |   Update On 2024-08-02 03:37 GMT
  • ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • ஆவடியிலிருந்து பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் நாளை மற்றும் 5-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை:

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலை பாதுகாப்பாக இயக்க பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ஆவடி பணிமனையில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி இரவு 12 மணி முதல் காலை 3.30 மணி வரை (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டாபிராமிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், சென்னை சென்டிரலில் (மூர் மார்க்கெட்) இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், ஆவடியிலிருந்து காலை 3 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயிலும் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதிஆவடி - பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, பட்டாபிராமிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4-ம் தேதி ஆவடி - பட்டாபிராம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மேலும், பட்டாபிராமிலிருந்து காலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 5-ம் தேதி பட்டாபிராம் - ஆவடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News