தமிழ்நாடு (Tamil Nadu)

தீபாவளி பண்டிகை- அரசு பஸ்களில் 2 நாளில் 4 லட்சம் பேர் பயணம்

Published On 2022-10-23 08:12 GMT   |   Update On 2022-10-23 08:12 GMT
  • சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 1808 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
  • 21, 22-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் மொத்தம் 7208 பஸ்கள் இயக்கப்பட்டன.

சென்னை:

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்களுக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. இந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள்.

சென்னையில் இருந்து நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 1808 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. 21, 22-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் மொத்தம் 7208 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 440 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் இதுவரை 1 லட்சத்து 77 ஆயிரத்து 532 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News