தமிழ்நாடு (Tamil Nadu)

மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை- இபிஎஸ் குற்றச்சாட்டு

Published On 2024-10-17 07:13 GMT   |   Update On 2024-10-17 07:26 GMT
  • வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.
  • திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* சென்னை ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை பார்க்க முடிகிறது.

* சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. கனமழை தொடர்ந்திருந்தால் மக்கள் எங்கும் சென்றிருக்க முடியாது.

* 20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர்.

* 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது.

* எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை.

* வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சனை இருந்திருக்காது.

* திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

* திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

* மக்கள் புரிந்து கொள்வதற்காகவே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

* அதிமுக ஆட்சியில் அந்தந்த துறை அமைச்சர்கள் பணிகளை கவனித்து கொண்டார்கள்.

* தற்போது அனைத்து துறை பணிகளையும் துணை முதலமைச்சரே செய்கிறார் என்று கூறினார்.

Tags:    

Similar News