அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
- அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது.
- ஒன்றாக இருப்பதால் தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் என்னை சந்தித்ததாக கூறுவது பச்சைப்பொய்.
* அதிமுகவில் எந்த பிரிவும் கிடையாது. அவர்கள் எல்லோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
* ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
* அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருங்கிணைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.
* நீக்கப்பட்டவர்களை சேர்க்குமாறு மூத்த தலைவர்கள் யாரும் வலியுறுத்தவில்லை.
* அதிமுக இரண்டாகி விட்டது அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை கூட இனி உபயோகிக்க வேண்டாம்.
* பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள்.
* ஒன்றாக இருப்பதால் தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம் என்று அவர் கூறினார்.