தமிழ்நாடு (Tamil Nadu)

கள்ளச்சாராய பலி உயர்வு- கள்ளக்குறிச்சி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

Published On 2024-06-20 02:00 GMT   |   Update On 2024-06-20 02:30 GMT
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
  • கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார்.

சென்னை:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார்.

Tags:    

Similar News