தமிழ்நாடு

திருக்கழுக்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2022-10-01 06:20 GMT   |   Update On 2022-10-01 06:20 GMT
  • பவித்திரன் மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார்.
  • விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த வீராபுரத்தை சேர்ந்தவர் மகன் பவித்திரன், (வயது 20) மேல்மருவத்தூர் தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினியரிங் படித்து வருகிறார். அவரது விவசாய நிலத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்ப் சுவிட்ச்சை போட்டபோது எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட பவித்திரன் அதே இடத்தில் உயிரிழந்தார்.

திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News