தமிழ்நாடு

திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்- தொல்.திருமாவளவன் அறிக்கை

Published On 2023-04-18 08:01 GMT   |   Update On 2023-04-18 08:01 GMT
  • ‘திருமா பயிலகத்தின்’ சார்பில் அரசு வேலை வாய்ப்புகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
  • அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின்' சார்பில் அரசு வேலை வாய்ப்புகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இப்பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 23-ந் தேதி காலை 9 மணிக்கு TNUSRB-Police, Sub-Inspector தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

மேலும், கீழ்காணும் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு வகுப்பு களில் இணைந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: சென்னை-9042991182, அங்கனூர்-9843660449, ஜெயங்கொண்டம்-9865756216, சிதம்பரம்-9894447722, திருப்போரூர்-8610392275, கடலூர்-9600244839, கும்பகோணம்-7904832410.

திருவாரூர்-8825995117, திருச்செந்தூர்-8675590803, கள்ளக்குறிச்சி-9003612449, நாகப்பட்டினம்: 9787825382, நெடுங்குளம்-7639091631, புதுகோட்டை 9443903727, குறிஞ்சிப்பாடி-9042991182, மதுராந்தகம்-9566227765, திருச்சிற்றம் பலம்-9965734583, மின்னஞ்சல் : thirumapayilagam@gmail.com

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News