தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2024-07-26 02:13 GMT   |   Update On 2024-07-26 02:13 GMT
  • குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது.
  • பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

பந்தலூர், மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதிர்காடு, பாட்டவயல், கரியசோலை, சேரம்பாடி, எருமாடு உள்பட தாலுக்கா பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News