தமிழ்நாடு (Tamil Nadu)
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை
- தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி, சென்னை அண்ணாசாலை, கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், வானகரம், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.