தமிழ்நாடு
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே. வாசன் பாராட்டு
- இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் வெற்றியானது உலக அளவில் பெரும் பாராட்டைப் பெறுகிறது.
- இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து சிறக்க, வளர, உயர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக செயற்கைக்கோள்களை எஸ்.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்கள் பெரும் பயனடைவார்கள். இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் வெற்றியானது உலக அளவில் பெரும் பாராட்டைப் பெறுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சி தொடர்ந்து சிறக்க, வளர, உயர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். இதற்காக கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றிவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.