தமிழ்நாடு

காமராஜர் பிறந்தநாள்: கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்- மு.க.ஸ்டாலின்

Published On 2022-07-15 04:10 GMT   |   Update On 2022-07-15 04:10 GMT
  • நாம் கல்வி பெற்றிட காமராஜர் முன்னெடுத்த திட்டங்களை தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்.
  • தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திட உறுதிகொள்வோம்.

சென்னை:

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிலையில், காமராஜர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!

போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!

கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்!

தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News