தமிழ்நாடு (Tamil Nadu)
சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக மணிகண்டன் நியமனம்
- சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின்பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் நியமித்துள்ளனர்.
அதன்படி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவராக ஜெகநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.