மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துது வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று காலையில் 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
நேற்று மாலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தது. இதனால் இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கன அடி வீதமும் என மொத்தம் 13ஆயிரத்து 750 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.