தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக அரசின் நடவடிக்கையால் 'வெள்ளச்சேரி' வேளச்சேரியாக மாறி உள்ளது- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2024-10-16 09:17 GMT   |   Update On 2024-10-16 09:29 GMT
  • தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை.
  • இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை.

* தமிழக அரசின் நடவடிக்கையால் தண்ணீர் தேங்காமல் வெள்ளச்சேரி வேளச்சேரியாக மாறி உள்ளது.

* கடந்தாண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பால் பாடம் கற்று இந்தாண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 முதல் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

* அதிகனமழை பெய்த போதிலும் சென்னையில் 4 மணி நேரத்தில் மழைநீர் வடிந்துள்ளது.

* அதிமுக ஆட்சியில் அடையாற்றில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

* மழைநீர் வடிகால் பணிகளில் சில அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதனை நிறைவு செய்தது திமுக அரசுதான்.

* பல இடங்களில் நான் ஆய்வு செய்தேன் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. அதிமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறது.

* இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

* தமிழக அரசின் பணியை மக்களே பாராட்டுகின்றனர் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News