தமிழ்நாடு (Tamil Nadu)
செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர்
- செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
- குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது.
அதில், அதிக புள்ளிகளை பெற்று செஸ் ஒலிம்பியாடில் முதல் முறையாக இந்தியா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.90 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்
குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலையும் அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சம் காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.