தமிழ்நாடு

பேராசிரியர்கள் மோசடி விவகாரம்- அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்ட கவர்னர்

Published On 2024-07-25 04:38 GMT   |   Update On 2024-07-25 05:50 GMT
  • நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என கவர்னர் அறிக்கையாக கேட்டுள்ளார்.

சென்னை:

அங்கீகாரம் பெறுவதற்காக கல்லூரிகளில் முறைகேடாக பல பேராசிரியர்கள் பணியாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர்.

நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என கவர்னர் அறிக்கையாக கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்டுள்ளது.

Tags:    

Similar News