தமிழ்நாடு (Tamil Nadu)

சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்

Published On 2024-06-12 07:46 GMT   |   Update On 2024-06-12 07:46 GMT
  • நான்காவது முறையாக ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
  • சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வளர்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும்.

சென்னை:

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நான்காவது முறையாக ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வளர்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும்.

ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையிலான உறவை வலுப்படுத்தவும், இருமாநில வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் எதிர்நோக்குகிறேன் என கூறியுள்ளார். 

Tags:    

Similar News