தமிழ்நாடு (Tamil Nadu)

இசிஐ பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

Published On 2024-09-22 15:28 GMT   |   Update On 2024-09-22 15:28 GMT
  • இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராக சற்குணம் இருந்தார்.
  • இசிஐ பேராயர் எஸ்றா சற்குணம் பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 85 ஆகும்.

இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, திமுக தலைவர் முக ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர்.

தேர்தல் சமயங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தூதுவராகவும் இவர் செயல்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர். இது ஒருபுறம் இருக்க தனது கருத்துகளுக்காக எஸ்றா சற்குணம் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

Tags:    

Similar News