தமிழ்நாடு
கவர்னர் ஆர்.என்.ரவிக்காக கொண்டு செல்லப்பட்ட நாற்காலியை குப்பை வண்டியில் ஏற்றி சென்றதால் சர்ச்சை
- குடும்பத்தினருடன் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சென்ற கவர்னர், மேகமூட்டமாக இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
- கவர்னர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகள் குப்பை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி, அவரை வரவேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி வந்தார்.
இதையடுத்து குடும்பத்தினருடன் சூரிய அஸ்தமனத்தை பார்க்க சென்ற கவர்னர், மேகமூட்டமாக இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்நிலையில், அவர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகள் குப்பை வண்டியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.