தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

Published On 2022-08-23 03:43 GMT   |   Update On 2022-08-23 03:43 GMT
  • இதே வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை இன்று முன் வைக்கின்றனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இதனை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து இந்த வழக்க இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன் வைக்கின்றனர்.

Tags:    

Similar News